பூ உதிர்ந்தது
பெயின்டர் தாத்தாவிடம் அந்த புல்லாங்குழலை இசைக்க
கத்து கொள்ள வேண்டும் என்ற கார்த்தியின்
முயற்சி ஒன்றும் அவன் போடும் கணக்கு போலவே கை கூடவில்லை.
ம் கை கூடுவது என்றால் சும்மாவா
அவனது வகுப்பில் உள்ள மற்ற பசங்க எல்லாம் சைக்கிள் வைத்து இருக்கின்றனர்.
இவன் கேட்டால் மட்டும் காற்று இல்லை என்பார்கள், கிட்ட வந்து மிக வேகமாக ஓட்டிச் செல்வார்கள்.
அவனது காட்டில் என்றாவது சிறு மழை போல்
கல் ஏற்றி செல்லும் வண்டிகளோ அல்லது சித்தாப்பக்களின் சைக்கிளில் பின் செல்லும்
வாய்ப்போ கிடைத்துவிடும் அன்று ஆனந்தம் தான்.
ஆனால் வீடு திரும்பும் போது அதற்க்கெல்லாம்
சேர்த்து கிடைக்கும் கிரீஸ் கரையோ அல்லது கிழிந்தோ போய் இருக்கும் துணி.கேட்டால் சைக்கிள் வாங்கி கொடுங்கள் என்பான்.பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும் விட்டு விடுவார்கள்.
இதற்கு எல்லாம் முடிவு கட்ட அவனுக்கு புது
அட்லஸ் சைக்கிள் வாங்கி தந்தார்கள். கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கதையாக
கார்த்திக்கு கால் எட்டவில்லை சீட்டிலிருந்து.
ஒந்தி ஏறுவதும் அல்லது உயரமாக படியில் இருந்து சிட்டிலமர்ந்து ஒட்டுவதற்க்கு பழகிக் கொண்டான்.அதற்கு பிறகு தான் சோதனையே நெல் அறைக்க வேண்டும்,
நல்ல தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று வீடு வந்ததும் சரியாக கவிழ்வதுமாக இருந்தது வாழ்க்கை போல சைக்கிளும் பிறகு பழகிவிட்டது.
எல்லாம் அது போல் பழக முடியாது அல்லவா
இவன் தேடும் போது தாத்தா வேலைக்கு போய் விடுவார் அல்லது அவர் இருக்கும் போது இவனுக்கு ஸ்கூல் இருக்கும். இப்படியே
இந்த ஆடுபுலி ஆட்டம் தொடர்ந்தது.அவனும் மேல் நிலைப்பள்ளி சென்று வர ஆரம்பித்து விட்டான் பிறகு முடியவில்லை.
எப்போதோவது அவர் புல்லாங்குழல் இசையை கேட்டால் நின்று கேட்டு விட்டு செல்வதே அவனுக்கு வாடிக்கை. அது தொடர்ந்து ஒரே மாதிரியான ராகத்தில் இருக்கும் கற்பனைக்கு எட்டாத ஒரு மயக்கும் இசை.
சிறிது சோகரசம் சேர்ந்தொலிக்கும்.
அவரை பின் தொடர்ந்து வீட்டிற்கு சென்றால்
ஆடு குட்டிகள் மற்றும் குருவிகள் எல்லாம் கத்தும் வாசலில் வாடமல்லி கலரில் காகித
பூ உதிர்ந்து கிடக்கும்
வரன்டா,வரன்டா
என்று ஆடுகளுக்கு கருவை காயும் குட்டிகளக்கு கிளுவை தழையும் வைப்பார்,
பக்கத்தில் இருக்கும் கொய்யா மரத்தில்
இரண்டு கிண்ணம் இருக்கும் ஒன்றில் நீரும்
மற்றொன்றில் தானியமிடுவார்.
குருவிகள் எல்லாம் கிரிச் சத்தமிட்டு வரும் வீடு கூரைதான் சுற்றி பவழமல்லி,சந்தனமுல்லை,சாமந்தி என்று தேர்ந்த ஓவியனின் சித்திரம் போல் இருக்கும். வேலி ஒரத்தில் வைத்திருக்கும் டேபிள் ரோசும்,பட்ரோஐாவும் பூத்து சிரிக்கும் பார்த்த கண்கள் பார்த்திருக்க
தாத்தா சாமந்தி செடி எப்படி இவ்வளவு இருக்கு.
மாப்பிள்ளை அங்கே பாரு
பார்த்த இடத்தில் ஒரு சாமந்தி மாலை மண்ணில் பாதி தெரிய மூடி இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாக சாமந்தி கன்றுகள்.
ஒன்றை புடிங்கி
ஆள்காட்டி நடுவிரல் இடையில் வைத்து பாதி மண்ணில் தெரிய ஊன்றி சுற்றி அழுத்தி விட்டு தண்ணீர் தெளித்து பார்த்துக்க என்றார்.
தாத்தா நல்ல உயரம் வேலை செய்த உடம்பு
கருப்புதான் குணத்தில் சுத்தம் தங்கம்
காலை சூரியோதயத்துக்கு முன்பு குளித்து விபுதியிட்டு வந்து அங்காளம்மன் கோயில் முன்பு
இரண்டு கை கூப்பி வணங்கும் போது சூரியனும் எட்டி பார்க்கும்.ஒரு சேர வணங்குவார்.
அவன் தூக்க கலக்கதில் சிறுநீர் கழிக்க வெளிவந்து பார்கும் போது தாத்தா திரும்புவார். கையில் இதுபோல் மாலையோ
தழையோ இருக்கும்.
தாத்தா குருவிக்குலாம் தீனி வக்கிரிய,புடிச்சு சாப்பிடுவ தான
ஏய் இல்லப்பா அதுவளுக்கு தீனி தண்ணீலாம்
கிடைக்காதுல அதான்
தாத்தா நான் ஒரு குயில புடிச்சு ஆக்கி சாப்ட்டன்.
படிக்கறவன் நீ எப்படிரா புடிச்ச
தாத்தா ஸ்கூல் லீவுல ஊருக்கு போனன்ல
மாமா பூலா குச்சில வளையம் சென்சு அது நடுவுல சின்ன கழுத்து நுழையரளவு வளையம் வச்சு சுற்றி குயில் உட்காரதற்க்கு சிலந்தி வலை மாதிரி பின்னிட்டு நடுவுல மாட்டு முடியால சுருக்குப்போட்டு அதுக்கு
கண்ணுக்கு தெரியாத மறைச்சு மரத்தில
கட்டுச்சு
கட்டுக்கோடி பழம் சிகப்பும் மன்சளுமா இருக்கும் அத கட்டுச்சு நடுவுல தாத்தா
அதுல மாட்டுல
நான் பார்த்து வச்சிருந்தன்ல
அதே மாதிரி சென்சு வக்கீல் வுட்டு கருவ மரத்துல கட்டுனம் பாரு சாயந்திரம் கருப்பு குயில் மாட்டிடுச்சு,பார்த்துட்டு
அப்பா ஏசுச்சா பிறகு அத்த வீ்ட்டுல சென்சு
சாப்பிட்டோம்
நான் புடிக்கரதுல்ல.
பாவம் அது வோ எப்பவும் புடிக்க கூடாது.
விளையாடு ஓடு ஓடு.
காலம் இருவருக்கும் முன்னே வேகமாக ஓடியதில் அவன் கல்லூரி சென்றான்.
தாத்தா வேலைக்கு செல்வார்
பெயின்டர் என்றால் கடவுள் சிலைகளுக்கு வண்ணம் தீட்டுவதில் மிக பேர் போனவர்.வேலை இல்லை என்றால் மட்டுமே அவர் வீடுகளுக்கு வர்ணம் அடிக்க செல்வார்
பெண்களை அம்மா என்றும் பிள்ளைகளை
ஐயா என்று கூப்பிடுவதிலேயே பிரியம் தெரிய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக